search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சபரிமலை தந்திரி"

    சபரிமலை தந்திரி கண்டரரு ராஜீவருவை பதவியில் இருந்து நீக்க அம்மாநில அரசு திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியானதையடுத்து தேவசம்போர்டு விளக்கம் அளித்துள்ளது. #Sabarimala #SabarimalaTantri
    திருவனந்தபுரம்:

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் பலத்த எதிர்ப்பு மற்றும் போராட்டத்துக்கு மத்தியில் 50 வயதுக்கு உட்பட்ட 2 பெண்கள் கடந்த வாரம் தரிசனம் செய்தனர். இதைத்தொடர்ந்து கோவிலின் நடை அடைக்கப்பட்டு பரிகார பூஜை செய்யப்பட்டது. இது தொடர்பாக சபரிமலை தந்திரி கண்டரரு ராஜீவருக்கு முதல்-மந்திரி பினராயி விஜயன் மற்றும் மந்திரிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

    இதன் தொடர்ச்சியாக கண்டரரு ராஜீவருவை தந்திரி பதவியில் இருந்து நீக்க மாநில அரசு திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியானது. ஆனால் இந்த செய்தியை தேவசம்போர்டு மறுத்து உள்ளது. மகரவிளக்கு பண்டிகையை சீர்குலைக்கவே இந்த சர்ச்சை கிளப்பி விடப்பட்டு உள்ளதாக தெரிவித்து உள்ளது.  #Sabarimala #SabarimalaTantri
    சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை தந்திரி ஏற்காவிட்டால் அவர் பதவி விலகியிருக்க வேண்டும் என முதல்-மந்திரி பினராயி விஜயன் தெரிவித்தார். #Sabarimala #KeralaChiefMinister #PinarayiVijayan
    திருவனந்தபுரம்:

    சபரிமலையில் 50 வயதுக்கு உட்பட்ட 2 பெண்கள் நேற்று முன்தினம் சாமி தரிசனம் செய்தனர். இதைத்தொடர்ந்து தந்திரி கண்டரரூ ராஜீவரூ, கோவிலின் நடையை அடைத்து பரிகார பூஜைகள் மேற்கொண்டார். இதற்கு முதல்-மந்திரி பினராயி விஜயன் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

    இது குறித்து அவர் கூறுகையில், ‘சபரிமலையில் நேற்று (நேற்று முன்தினம்) வித்தியாசமான சம்பவம் ஒன்று நடந்திருக்கிறது. கோவிலின் நடையை அடைத்து பரிகார பூஜை செய்துள்ளார், தந்திரி. இது சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு எதிரானதாகும். இந்த வழக்கில் அவரும் ஒரு வாதி என்பதால், அவரது கருத்தையும் கேட்டே தீர்ப்பு வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த தீர்ப்பை தந்திரி ஏற்காவிட்டால் அவர் பதவி விலகியிருக்க வேண்டும்’ என்று தெரிவித்தார்.

    மாநிலத்தில் நேற்று நடந்த வன்முறை குறித்து பினராயி விஜயன் கூறும்போது, ‘நேற்று முதல் (நேற்று முன்தினம்) மாநிலத்தில் ஏராளமான வன்முறை சம்பவங்கள் நடந்திருக்கின்றன. செய்தியாளர்கள், பெண்கள், போலீசார் என பலர் தாக்கப்பட்டு உள்ளனர். 31 போலீசார் காயமடைந்துள்ளனர். 79 அரசு பஸ்கள் நொறுக்கப்பட்டு உள்ளன. இது பா.ஜனதா மற்றும் சங்க பரிவார அமைப்புகள் திட்டமிட்டு நடத்திய தாக்குதல்’ என குற்றம் சாட்டினார்.
    சபரிமலையில் பெண்கள் நுழைந்ததையடுத்து பரிகார பூஜை செய்த தந்திரிக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. #SabarimalaIssue #SabarimalaTemplePriest
    புதுடெல்லி:

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் இதுவரை இல்லாத வகையில் 10 முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்களையும் அனுமதிக்கும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து போராட்டங்கள் நடைபெறுகின்றன.

    உச்ச நீதிமன்ற உத்தரவிற்குப் பின்னர் கோவில் நடை திறக்கப்பட்டபோது, 10 வயது முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்கள் பலர், சபரிமலைக்கு செல்வதற்கான முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால், பக்தர்களின் கடும் எதிர்ப்பு போராட்டங்கள் காரணமாக அவர்களால் செல்ல முடியவில்லை.


    இந்நிலையில், கேரளாவைச் சேர்ந்த பிந்து (வயது 42), கனகதுர்கா (44) ஆகிய 2 பெண்கள் நேற்று அதிகாலையில் சபரிமலை ஐயப்பனை தரிசித்தனர். இதனை தொடர்ந்து சபரிமலை ஐயப்பன் கோவிலை மூடி பரிகார பூஜை செய்யப்பட்டது. அதன்பின்பே கோயில் நடை திறக்கப்பட்டது.

    இந்த நிலையில், நீதிமன்ற உத்தரவை மீறி பரிகார பூஜைக்கு ஏற்பாடு செய்த தந்திரி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞர் தினேஷ் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்கவும் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் இந்த வழக்கை அவசரமாக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. ஜனவரி 22-ம் தேதி மற்ற சீராய்வு மனுக்களுடன் சேர்த்தே இந்த வழக்கு விசாரிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. #SabarimalaIssue #SabarimalaTemplePriest

    ×